விருந்திற்க்கு வந்திருந்த
மேக கூட்டங்கள்
மனமுவந்து தந்த
பரிசுகளை
பரிசுகளை
மழையாய் பொழிவதும்...
முத்து முத்தாக
பொழிந்த மழைதனில்
சொட்டு சொட்டாக
சேர்ந்த நீர் கூட்டங்களில்
வந்தமர்ந்து மகிழும்
பறவையினங்களும்...
பூவினங்கள் தன்
மதுரங்களை கூடிமகிழும்
வண்டுகளுக்கு
தாரை வார்ப்பதும்...
மதுவுண்ட வண்டினங்கள்
மதிமயங்கி
மதிமயங்கி
மலர்விட்டு மலர் தாவி
மனம் குதுகழிப்பதும்...
விதைகளுக்குள் மறைந்திருந்த
விருட்சங்கள்
வளர்ந்து
வளர்ந்து
செடி கொடிகளாய்
படர்வதும்...
தென்பொதிகை
தென்றலின்
இன்னிசையில்
மகிழ்ந்தாடும்
பறவையினங்கள்
தானாடி மகிழ்வதும்...
எங்கே போகிறோம்
என தெரியாமல்
சுதந்திரமாய்
சிறகடித்து பறக்கும்
சின்னஞ்சிறு
பட்டாம்பூச்சிகள்
பறந்து திரிவதும்...
கொட்டி கிடக்கும்
இயற்க்கை அழகினை
கட்டிக்காத்திடும்
நல் மக்கள் நிறைந்ததும் ...
குட்டி கோடம்பாக்கம்
என்னும் நெல்லை
சுந்தரபாண்டியாபுரம்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக