சனி, 17 நவம்பர், 2018

என் கிராமம் முள்ளிக்குளம்


பறப்பதைப் பார்த்து 
அதிசயித்தோம் - கையில்
இருப்பதை எண்ணி
சிறகடித்தோம்

இன்டர்நெட் என்னடா
எங்க பாட்டி மேலடா 

ஜாதியும் , மதமும் 
தெரியாது - இங்கு 
வேலியும் , கேள்வியும் 
கிடையாது 

அந்நாள் தானே
சொர்க்கம்  - அது
கிராமத்தில் தானே
இருக்கும் 

பனைமரம் இருக்கு 
பலநாளா 
பசித்தால் , பறிப்போம்
என் தோழா

யாரு கேள்வி கேட்பது
எல்லோருக்கும் - செல்லம்
நாங்களே !

பெற்றோரிடம் கேட்பதுமில்லை
பெட்ரோல் போட தேவையுமில்லை
ஒரு நொங்கு வண்டி போதுமே
நூறு வண்டி ஆகுமா ?

ஏழை என்று 
நினைத்ததும் இல்லை
எதையும் பார்த்து
ஏங்கியதும் இல்லை 

கொட்டி கிடக்குது 
உன் மகிழ்ச்சி 
அது கிராமம் தானே 
சாட்சி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருமணநாள் வாழ்த்துக்கள்

இல்லத்தில் எப்போதும் இதயம் சொல்வதை கேள் ! அறிவினை அலுவலகத்தில் வைத்துக்கொள் ! வாழ்க்கை வசந்தமாகும் ! என் இனிய திருமணநாள் நல்வா...