பறப்பதைப் பார்த்து
அதிசயித்தோம் - கையில்
இருப்பதை எண்ணி
சிறகடித்தோம்
இன்டர்நெட் என்னடா
எங்க பாட்டி மேலடா
ஜாதியும் , மதமும்
தெரியாது - இங்கு
வேலியும் , கேள்வியும்
கிடையாது
அந்நாள் தானே
சொர்க்கம் - அது
கிராமத்தில் தானே
இருக்கும்
பனைமரம் இருக்கு
பலநாளா
பசித்தால் , பறிப்போம்
என் தோழா
யாரு கேள்வி கேட்பது
எல்லோருக்கும் - செல்லம்
நாங்களே !
பெற்றோரிடம் கேட்பதுமில்லை
பெட்ரோல் போட தேவையுமில்லை
ஒரு நொங்கு வண்டி போதுமே
நூறு வண்டி ஆகுமா ?
ஏழை என்று
நினைத்ததும் இல்லை
எதையும் பார்த்து
ஏங்கியதும் இல்லை
கொட்டி கிடக்குது
உன் மகிழ்ச்சி
அது கிராமம் தானே
சாட்சி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக