1.
மஞ்சளை பூசி ,
மாவிலை கோர்த்து
முக்கல்லை எடுத்து
முற்றத்தில் வைத்து
ஆதவன் முன்னே
ஏருழவனை எண்ணி
அன்னை வைத்திடும் பொங்கல் !!!
2.
வெருப்புகள் மறைந்து
கரும்புகள் நிறைந்த
தமிழர்கள் வீடு - அது
தை பொங்கல் என்றே பாடு !!!
3.
உழைத்து களைத்த
உள்ளங்கள் அனைத்தும்
இனிப்பை சுவைத்து
மகிழும் - நாளே
பொங்கல் திருநாள் !!!
4.
தாம் ஏழையாக இருந்தாலும்
பிற உயிர்களையும்
தன்னைப்போல் - மதித்து
அரவணைத்து செல்லும்
நாளே - பொங்கல் திருநாள் !!!
5.
உலகின் முதல்
உழவரின் நண்பன்
என் இனிய மாட்டுப்பொங்கல்
நல்வாழ்த்துகள் !!!
6.
ஒளிகொடுத்து வழிகாட்டி
வாழவைக்கும் சூரியனுக்கு
நன்றி !!!
7.
வண்டிக்கு மட்டும்
தோழ் கொடுக்காமல்
எங்கள் வாழ்க்கைக்கும்
தோழ் கொடுத்த மாடுகளுக்கு
நன்றி !!!